Monday, January 12, 2015

நித்யானந்தாவால் பாலுறவில் ஈடுபட முடியும்: பெங்களூர் கோர்ட்டில் சிஐடி போலீசார் அறிக்கை தாக்கல்!




பெங்களூரு: சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவால் உடல் ரீதியான பாலுறவில் ஈடுபட முடியும்... அவர் ஆண்மை உள்ளவர் என்று கர்நாடக சிஐடி போலீசார் ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த 2012-ம் ஆண்டு நித்யானந்தா மீது அவரது முன்னாள் சிஷ்யை ஆர்த்தி ராவ் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். ஆனால் நித்யானந்தா தனக்கு ஆண்மை இல்லை எனக் கூறி குற்றச்சாட்டை மறுத்தார்.


இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கர்நாடக சிஐடி போலீஸார் ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் கடந்த செப்டம்பர் 8-ந் தேதி பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரி சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் நித்யானந்தா மீதான பாலியல் பலாத்கார வழக்கு கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. நித்யானந்தாவும் சீடர்களும் நீதிமன்றத்துக்கு வந்தனர்.
அப்போது கர்நாடக சிஐடி போலீசார் தரப்பில், நித்யானந்தாவின் ஆண்மை பரிசோதனை அறிக்கை சீல் வைக்கப்பட்ட நிலையில் தாக்கல் செய்யப்பட்டது. அதைப் பெற்றுக்கொண்ட நீதிபதி மஞ்சுளா, இந்த வழக்கில் அனைத்து விசாரணையும் முடிந்துவிட்டது. குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு இறுதி வாதத்தை வரும் 27-ந் தேதி தொடங்குங்கள்.

குற்றம்சாட்டப்பட்டவர் வரும் பிப்ரவரி 11-ந் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்திரவிட்டார்.

நீதிமன்றத்தில் சிஐடி போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில், நித்யானந்தாவுக்கு 37 வயதான ஆணுக்கு இயல்பாக இருக்கக்கூடிய அனைத்து உடல் வளர்ச்சியும் இருக்கிறது. அவரால் உடல் ரீதியான பாலுறவில் ஈடுபட முடியும். அதனால் அவருக்கு ஆண்மை உள்ளவர் என மருத்துவர் குழு சான்று அளித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நித்யானந்தா மீதான பாலியல் பலாத்கார வழக்கு கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. நித்யானந்தாவும் சீடர்களும் நீதிமன்றத்துக்கு வந்தனர்.

அப்போது கர்நாடக சிஐடி போலீசார் தரப்பில், நித்யானந்தாவின் ஆண்மை பரிசோதனை அறிக்கை சீல் வைக்கப்பட்ட நிலையில் தாக்கல் செய்யப்பட்டது. அதைப் பெற்றுக்கொண்ட நீதிபதி மஞ்சுளா, இந்த வழக்கில் அனைத்து விசாரணையும் முடிந்துவிட்டது. குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு இறுதி வாதத்தை வரும் 27-ந் தேதி தொடங்குங்கள்.

குற்றம்சாட்டப்பட்டவர் வரும் பிப்ரவரி 11-ந் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்திரவிட்டார்.

நீதிமன்றத்தில் சிஐடி போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில், நித்யானந்தாவுக்கு 37 வயதான ஆணுக்கு இயல்பாக இருக்கக்கூடிய அனைத்து உடல் வளர்ச்சியும் இருக்கிறது. அவரால் உடல் ரீதியான பாலுறவில் ஈடுபட முடியும். அதனால் அவருக்கு ஆண்மை உள்ளவர் என மருத்துவர் குழு சான்று அளித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


thanks to THATSTAMIL NEWS 
Published: Tuesday, January 13, 2015, 9:22 [IST

Monday, December 1, 2014

இஸ்லாத்தை தீவிரவாதத்துடன் ஒப்பிடுவது தவறு: போப் பிரான்சிஸ்........



இஸ்தான்புல்: இஸ்லாத்தை வன்முறை மற்றும் தீவிரவாதத்துடன்  
ஒப்பிடுவது தவறு என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

போப் பிரான்சிஸ் மூன்று நாட்கள் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை துருக்கி சென்றார். சனிக்கிழமை அவர் துருக்கியின் மிகவும் பிரபலமான மசூதியான இஸ்தான்புல் நகரில் இருக்கும் ப்ளூ மசூதிக்கு சென்று சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்தார். அவர் இஸ்லாமிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.


ஞாயிற்றுக்கிழமை தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு வாட்டிகன் கிளம்பிய போப் பிரான்சிஸ் கூறுகையில்,

மக்கள் இஸ்லாத்துடன் தீவிரவாதத்தை ஒப்பிடுகிறார்கள். இதனால் தான் மேற்கத்திய நாடுகளில் வாழும் பல முஸ்லீம்கள் பாதிக்கப்படுகிறார்கள். இஸ்லாத்துடன் தீவிரவாதத்தை ஒப்பிடுவது தவறு. இந்த போக்கை மாற்ற தீவிரவாத்தத்திற்கு உலக முஸ்லீம் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தால் நன்றாக இருக்கும் என்று நான் துருக்கி அதிபரிடம் தெரிவித்துள்ளேன்.

முஸ்லீம்களின் புனித நூலான குர்ஆன் அமைதியை போதிக்கிறது.
கிறிஸ்தவர்கள் அனைவரும் அடிப்படைவாதிகள் என்று கூற முடியாது. ஒரு சிலர் தான் அடிப்படைவாதிகள். அதே போன்று அனைத்து மதங்களிலும் சிறிய குழுக்கள் இருக்கத் தான் செய்யும். அதை வைத்து பொதுவாக பேசிவிடக் கூடாது என்றார்.


இந்த 3 நாட்கள் பயணத்தில் போப் பல முறை ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

thanks to thatstamil

Sunday, June 22, 2014

அதிரை WSC நடத்திய மாநில அளவிலான மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டியில் திருச்சி - அதிரை - மதுரை- திருப்பூர் அணியினர் பரிசை தட்டிச்சென்றனர் !


அதிரை வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் [ WSC ] நடத்தும் மாநில அளவிலான 14 ம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி நேற்று மேலத்தெரு WSC மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

நேற்று இரவு முதல் தொடர்ந்து விறுவிறுப்பாக  நடைபெற்று வந்த ஆட்டத்தில் பல்வேறு ஊர்களை அணிகள் பங்கேற்று ஆடியது. போட்டியின் இறுதியில் முதல் பரிசை திருச்சி அணியினர் ரூபாய் 20,000/ த்தையும்,இரண்டாம் பரிசைஅதிரை KMC அணியினர் ரூபாய் 15,000/ த்தையும்,  மூன்றாம் பரிசை மதுரை அணியினர் ரூபாய் 10,000/ த்தையும், நான்காம் பரிசை திருப்பூர் அணியினர் ரூபாய் 8,000/ த்தை  தட்டிச்சென்றனர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அதிரை KMC அணியை சேர்ந்த நட்சத்திர வீரர் ஜமீம் ஆட்ட நாயகன் பரிசை தட்டிசென்றார்.

இன்றைய ஆட்ட இறுதியில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அதிரை காவல்துறை அதிகாரிகள், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் உடற்கல்வி  ஆசிரியர் திரு ராமச்சந்திரன், தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், WSC முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி கெளரவித்தார்கள்.

சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு நடுவர்களாக செயல்படும் வரதராஜன் மற்றும் அருள் ஜோதி ஆகியோர் இன்றும் நேற்றும் நடைபெற்ற  போட்டிகளுக்கு நடுவர்களாக பணி புரிந்தனர். நிகழ்சிகளை ராஜேந்திரன் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.

இன்றைய இறுதி ஆட்டங்களை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகைதந்து ரசித்தனர்.வந்திருந்த அனைவருக்கும் அமர்ந்து பார்வையிட நாற்காலி வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

களத்திலிருந்து அப்துல் வஹாப் ( உஜாலா )













thanks to adirai news .net