டெல்லி
: தீவிரவாதத்தின் அடையாளமாக பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மீம் அப்சல் சாடியுள்ளார்.
குஜராத் இனக்கலவரங்களால்தான் இந்திய முஜாஹிதீன் என்ற தீவிரவாத இயக்கம் உருவானது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் ஷகீல் அகமது கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதனால் இக்கருத்து ஷகீல் அகமதுவின் தனிப்பட்ட கருத்து என்று கூறி காங்கிரஸ் ஒதுங்கிக் கொண்டது. ஷகீல் அகமதுவும் தமது தனிப்பட்ட கருத்து எனக் கூறியிருந்தார்.
ஆனால் மற்றொரு சர்ச்சைக்குரிய காங்கிரஸ் தலைவரான திக்விஜய்சிங்கோ, ஷகீல் அகமது கருத்தை ஆதரிப்பதாகக் கூறியதுடன் அத்வானியின் ரத யாத்திரைக்குப் பின்னரே தீவிரவாதம் தலைதூக்கியது என்று ஒரு குண்டைப் போட்டார்.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மீம் அப்சல் நேற்று சந்தித்தார். அப்போது ஷகீல் அகமது, திக்விஜய்சிங் ஆகியோரது கருத்துகள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு பதிலளித்த அவர், பாரதிய ஜனதா கட்சி தீவிரவாதத்தின் அடையாளமாக இருக்கிறது. 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் அவர்கள் செய்தது தீவிரவாதத்தைவிட சற்றும் குறைந்தது அல்ல.
அப்பாவி மக்களை கொல்வதும், அவர்களுக்கு கேடு செய்வதும்தான் தீவிரவாதம். பாரதிய ஜனதா கட்சி என்ன செய்தது என்பது குறித்து நான் புதிதாக ஒன்றும் சொல்லிவிட வில்லை. ஊடகங்களே அதை சொல்லி வந்திருக்கின்றன என்றார்.
THANKS TO : THATSTAMIL NEWS Published: Wednesday, July 24, 2013, 10:11 [IST]
No comments:
Post a Comment