Sunday, August 26, 2012

'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியின் கட்டிட பணிக்கு உதவுங்கள்:



                                           
                                                  மஸ்ஜிதுத் தவ்ஹீத்..
   

  

அதிராம்பட்டிணத்தில் பள்ளிவாசல்களுக்கு பஞ்சமில்லை. எங்கு திரும்பினாலும் பள்ளிவாசல்கள். இப்படி பள்ளிவாசல்கள் நிறைந்த ஊரில், குர்ஆன் சுன்னா அடிப்படையில் செயல்படும் பள்ளிவாசல் உருவாக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிராம்பட்டிணம் கிளை முயற்சியை மேற்கொண்டது. அல்லாஹ்வின் உதவியினால் இந்த பணி வெற்றியடைந்தது.
அதிராம்பட்டினம் ECR ரோட்டில் (காதிர் முகைதீன் க...
ல்லூரிக்கு எதிரில்) நிலம் வாங்கப்பட்டு, கீற்று கொட்டகையில் தவ்ஹீத் பள்ளி செயல்பட ஆரம்பித்தது. இந்த பள்ளிக்கு 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜும்ஆ தொழுகை மட்டும் முதலில் நடத்தப்பட்டு வந்தது. தற்போது, ஐவேளை தொழுகையும் நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
தவ்ஹீத் பள்ளியில் ஜும்ஆ தொழுகை நடத்த ஆரம்பித்தவுடன் பெரும் கூட்டம் கூட ஆரம்பித்தது. மேற்சொல்லப்பட்ட பள்ளிகளில், கூட்டம் குறைய ஆரம்பித்தது. ஊரின் கடைசியில் உள்ள தவ்ஹீத் பள்ளியில் தூரத்தைக் கூட பார்க்காமல் மக்கள் குழும ஆரம்பித்தனர். ஜும்ஆ தொழுகையின் போது தவ்ஹீத் பள்ளி நிறைந்து, இடப்பற்றாக்குறையால் மக்கள் கடும் பெயிலில் கூட நின்று தொழுதனர். அல்ஹம்துலில்லாஹ்.

பல்வேறு தடைகளையும் மீறி ஸஹர் பாங்கு சொல்லப்பட்டது. சூரியன் மறைந்தவுடன் விரைந்து நோன்பு திறப்பதற்கும் பாங்கு சொல்லப்பட்டது. இந்த நபிவழிகளை தடுக்க முயன்ற அசத்தியவாதிகள் தோல்வியை தழுவினர். அல்ஹம்துலில்லாஹ்.
தவ்ஹீத் பள்ளியின் மூலம் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அவை:


1. ஐவேளை தொழுகை
2. ஜும்ஆ தொழுகை
3. ரமலானில் இரவு தொழுகை மற்றும் பயான்
4. ரமலானில் நோன்பு திறப்பதற்கு ஏற்பாடு
5. ரமலானில் ஸஹர் சாப்பாடு
6. தர்பியா நிகழ்ச்சி
7. கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு பயிற்சி முகாம்
8. இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி
9. பெண்களுக்கு ஜூம்ஆ தொழுகை



இப்படி பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் இந்த பள்ளியின் கட்டுமானப்பணி முடிந்தால் இன்னும் பல பணிகளை விரைவாக செய்ய முடியும். மேலும் ஜும்ஆ தொழுகையின் போது வெயிலில் தொழும் சகோதரர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியின் தற்போதைய நிலவரம்:
அதிராம்பட்டினம் ECR ரோட்டில் உள்ள மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளி தற்சமயம் கீற்று கொட்டகையில் தான் நடந்து வருகிறது.

பள்ளியின் கட்டிட செலவு மதிப்பீடு:

இந்த பள்ளியின் கட்டிட பணிகளுக்கு ரூபாய் 35 லட்சம் செலவாகும் (35,00,000) என்று பொறியாளர்களால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது (இது கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் போடப்பட்ட மதிப்பீடு).

குறிப்பு:
கட்டிட பொருட்களின் விலை மற்றும் கூலி ஆட்களின் சம்பள உயர்வின் காரணமாக கட்டிட பணியின் தற்போதைய மதிப்பீடு 56 லட்சம் அளவுக்கு உள்ளது.

ஜூம்ஆ தொழுகையில் பெண்கள்:

அதிரை தவ்ஹீத் பள்ளியில் இடம் பற்றாக்குறையால் இதுவரை ஆண்கள் மட்டுமே தொழுது வந்தனர். கடந்த 20.1.2012 முதல் பெண்களுக்கு ஜூம்ஆ தொழ, புதிய கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் புதிய கட்டிடத்தின் முதல் தளத்தை முழுமையாக நிரப்பினார்கள். இரண்டாம் தளத்தையும் சரி செய்து தாருங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.






நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளியில் அனுமதிக்கப்பட்டார்கள். இதை இன்றைய முஸ்லிம்கள் தடுக்கிறார்கள். அதிராம்பட்டிணத்தில் பெண்களை பள்ளியில் அனுமதிக்கும ஒரே பள்ளி, மஸ்ஜிதுத் தவ்ஹீத் என்பது குறிப்பிடத்தக்கது


'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியின் கட்டிட பணிக்கு உதவுங்கள்:


'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியின் கட்டிட பணிக்கு உதவ விரும்பும் சகோதரர்கள் உங்களின் நன்கொடைகளை கீழே தரப்பட்டுள்ள எங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பவும்.



கனரா வங்கி (CANARA BANK)
வங்கி பெயர் (Bank Name) :
கணக்கு எண் (Account Number): CANARA BANK
1201101046628 (Savings Account)
பெயர் (Name): TAMIL NADU THOWHEED JAMAATH
கிளை (Branch): ADIRAMPATTINAM




குறிப்பு: பணம் அனுப்பிய பின், நீங்கள் அனுப்பிய தொகையை எங்களுக்கு தெரியப்படுத்தவும். உங்களின் பணம் எங்களுக்கு வந்து சேர்ந்த பின், உங்களுக்கு தகவல் தரப்படும்.

மேலதிக விபரங்களுக்கு, கீழே உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிராம்பட்டிணம் கிளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.

தலைவர்: ராஜிக் அஹமது (மொபைல் எண்: +91-99434-47195)

துணைத்தலைவர்: அப்துல் ஜப்பார் (மொபைல் எண்: +91-99769-20828)

செயலாளர்: தமிம்

மேற்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ள முடியாதவர்கள், adirai.tntj2009@gmail.com என்ற இமெயில் முகவரியில் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

அல்லாஹ்வின் இந்த ஆலயத்தை கட்ட உங்களின் நன்கொடைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"யார் அல்லாஹ்விற்காக ஒரு பள்ளிவாசலைக் கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சுவனத்தில் ஒரு மாளிகையைக் கட்டுகிறான்".

அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி)
நூல்: முஸ்லிம், அஹமது, புகாரி


POST BY :-  ADIRAI TNTJ .

Saturday, August 25, 2012

செவ்வாய்கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள்? மனிதர்களின் ஆராய்ச்சியை வேவுபார்க்கின்றன?


                             Curiosity Spots Ufos Zooming Across Mars

வாஷிங்டன்: செவ்வாய்க்கிரகத்தில் இருந்து கியூரியாசிட்டி விண்கலம் அனுப்பியிருக்கும் படங்களில் காணப்படும் மர்ம பொருளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. கியூரியாசிட்டி அனுப்பியிருக்கும் மர்ம பொருள் வேற்றுகிரகவாசிகளின் வேவு கப்பல்களாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நாம் வாழுகிற பூமியில் இருந்து 57 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது செவ்வாய் கிரகம்! இங்கு உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராய அமெரிக்காவின் நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்ந்து புகைப்படங்களை அனுப்பி வருகிறது.
இந்நிலையில் செவ்வாய் கிரகத்தின் அடிவானப் பகுதியில் மர்மமான 4 பொருட்கள் அசைந்தாடுவது போன்ற படங்களை கியூரியாசிட்டி அனுப்பி வைத்திருக்கிறது. இந்த மர்ம பொருள் அங்குமிங்கும் அசைந்தாடக் கூடியதாக இருக்கிறது. இருப்பினும் அது என்ன என்று உறுதியாக சொல்ல முடியாததாகவும் உள்ளது. இது தொடபாக விஞ்ஞானிகளிடையே பல்வேறு கருத்துகள் உலா வருகின்றன.
நாம் நீண்டகாலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேற்றுக்கிரகவாசிகள்தான் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் தற்போது தொடங்கியிருக்கும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை தங்களது கப்பல்கள் மூலமாக வேவு பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பது ஒருதரப்பு விஞ்ஞானிகளின் கருத்து. மற்றொரு தரப்பினரோ தொழில்நுட்பத்தில் ஏற்படும் பிக்சல்கள்தான் இந்த அசைந்தாடும் பொருட்கள் என்கின்றனர். இதேபோல் இவை அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களா? அல்லது துகள்களா? என்ற சந்தேகமும் உள்ளது.
ஆக மனிதனோடு பஞ்சாயத்துக்கு மல்லுக்கட்ட வேற்றுக்கிரகவாசிகள் தயாராகிவிட்டார்களோ?

வறுத்த உணவுகளை கொடுக்காதீங்க! மூளையை பாதிக்கும் !!



                                   

குழந்தைகளுக்கு வறுத்த, எண்ணெயில் பொறித்த உணவுகளை கொடுத்தால் அது குழந்தைகளுக்கு மந்த தன்மையை ஏற்படுத்தி மூளையை மழுங்க வைத்துவிடும் என்று குழந்தை நல நிபுணர்கள் கூறியுள்ளனர். எனவே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை கொடுத்தால் மட்டுமே அவர்கள் புத்திசாலி குழந்தைகளாக இருப்பார்கள் என்கின்றனர் குழந்தைநல மருத்துவர்கள்.


குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்களுக்கு அக்கறை அதிகம் உண்டு. அவர்களின் வளர்ச்சியிலும், புத்திசாலித்தனத்திலும் ஆர்வம் கொண்ட பெற்றோர்கள் அவர்களுக்கு ச‌த்தான உணவை ம‌ட்டுமே கொடுப்பார்கள். சில குழந்தைகள் ஆர்வத்தில் சிக்கன் ப்ரை, ஐ‌ஸ்க்ரீம், சாக்லேட், பப்‌ஸ், பர்கர் உருளை‌க் ‌கிழ‌ங்கு வறுவல் போன்றவைகளை விரும்பி சாப்பிடுவார்கள். இதனால் இதனா‌ல், குழ‌ந்தை‌‌யி‌ன் உட‌ல் ம‌ட்டும‌ல்‌ல, மூளையு‌ம் பா‌தி‌க்க‌ப்படு‌கிறது எ‌ன்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் குழந்தையின் மூளை மந்தமாவதோடு அவர்களுக்கு டி‌ஸ்லெக்சியா எ‌ன்ற நோ‌ய் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எ‌ப்போது‌ம் ஓடி ‌விளையாடி‌க் கொ‌ண்டு சுறுசுறுப்பாக இருக்கும் குழ‌ந்தை ‌திடீரென ம‌ந்தமாக‌க் காண‌ப்ப‌ட்டா‌ல் அதை உடனடியாக கவ‌னி‌க்க வே‌ண்டு‌ம். சாதாரணமாக ‌வி‌ட்டா‌ல் விபரீதமான விளைவுகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.


அதேபோல் கடைகளில் விற்பனை செய்யப்படும் டின் பழச்சாறுகளையும் கொடுக்கக் கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாக, கா‌ய்‌க‌றிக‌ள், பழ‌ங்க‌ள் போ‌ன்றவை உடலு‌க்கு ந‌ன்மையை அ‌ளி‌க்கு‌ம். கடைகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், எனர்ஜி பானங்கள் போன்றவை குழந்தைகளுக்கு எந்த நன்மையும் தருவதில்லை என்கிறது ஜெர்னல் பீடியாட்ரிக்ஸ் ஆய்வு முடிவு ஒன்று. மாறாக இவை உடல் நலத்தைக் கெடுத்து விடுகிறதாம். எனவே 100 சதவிகிதம் பழச்சாறு என்றெல்லாம் கவர்ச்சிகரமாய் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து அதனை குழ‌ந்தைகளு‌க்கு‌ம் வா‌ங்‌கி கொடு‌க்கா‌தீ‌ர்க‌ள் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.


மேலும் குழ‌ந்தைகளை ஊ‌ட்ட‌ச்ச‌த்தான உணவை உ‌ண்ணுமாறு ‌நீ‌ங்க‌ள் எ‌ந்த அள‌வி‌ற்கு வ‌ற்புறு‌த்து‌கி‌றீ‌ர்களோ, அ‌ந்த அள‌வி‌ற்கு த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்துவதையு‌ம் ஊ‌க்க‌ப்படு‌த்து‌ங்க‌ள். சா‌ப்‌பி‌ட்ட ‌பிறகு முழுதாக ஒரு ட‌ம்ள‌ர் ‌நீராவது அவ‌ர்க‌ள் குடி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதை பழக்கப்படுத்த வேண்டும். ‌விளையா‌ட்டி‌ன் போது, படி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் போது இடை இடையே ‌நீ‌ர் அரு‌ந்த வே‌ண்டு‌ம் எ‌ன்பதை ‌சில நா‌‌ட்களு‌க்கு ‌நினைவு படு‌த்து‌ங்க‌ள். எ‌ங்கு செ‌ன்றாலு‌ம் த‌ண்‌ணீ‌ர் கொ‌ண்டு செ‌ல்லு‌‌ம் பழ‌க்க‌த்தையு‌ம் கொ‌ண்டு வாரு‌ங்க‌ள். பழச்சாறு போன்றவற்றுக்குப் பதிலாக தண்ணீர் அதிகமாய் அருந்துவதற்குக் குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.





Monday, August 13, 2012

பெருநாள் கொண்டாட்டமும், கொலைவெறி சுடிதாரும்.







புனிதமிக்க ரமழான் மாதம் முடிவுறும் தருவாயில் ஈகைத் திருநாளான நோன்புப் பெருநாளை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த சந்தர்ப்பத்தில் பெருநாள் சந்தோஷத்தைக் கழிப்பதற்காக இஸ்லாமியர்கள் புத்தாடை வாங்கும் படலத்தை நோன்பின் ஆரம்பத்திலேயே துவக்கிவிட்டார்கள். பெருநாளைக்காக புத்தாடை அணிவதை இஸ்லாம் தாராளமாக வரவேற்கின்றது. புத்தாடை அணிய வேண்டும்.

ஆனால் பெருநாள் சந்தோஷத்தைக் கழிப்பதற்காக ஆடை வாங்குவதாகக் கூறிக் கொண்டு புனிதமிக்க இறுதிப் பத்தின் புனிதமான நேரங்களை வீனடிப்பதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிப்பதில்லை.

ரமழானின் இறுதிப் பத்தை எடுத்துக் கொண்டால் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் குடும்பத்துடன் இரவு, பகல் என்று பாராமல் ஆடைக் கடைகளில் நிறம்பி வழிவதைக் காண முடிகின்றது. இறுதிப் பத்தென்றாலே பெருநாள் ஆடை வாங்குவதற்குறிய நாட்கள் தான் என்பதைப் போல் மக்கள் மத்தியில் ஒரு நிலைபாடு உருவாகியிருக்கிறது.

கொலைவெறி சுடிதார் தான் எனக்கு வேண்டும்.

இதே நேரம் இஸ்லாத்தை படித்து அதன்படி குழந்தைகளை வளர்க்க வேண்டிய பெற்றோர் சினிமாவின் நிழலில் பிள்ளைகளை வளர்த்தெடுப்பதின் விளைவு, பெருநாள் ஆடையைக் கூட சினிமாக்காரனின் ஆடையாக இருக்க வேண்டும் என்று நம் பிள்ளைகளும், பெற்றோர்களும் விரும்புகின்றார்கள்.

பெருநாள் தினம் நெருங்கிவிட்டாலே சினிமா திரைப்படங்களின் பெயர்களிலும், ஹீரோ, ஹீரோயின்களின் பெயர்களிலும் தான் ஆடைகள் கூட வெளியிடப்படும். காரணம் மக்கள் சினிமா மேல் வைத்துள்ள மோகத்தை வியாபாரமாக்குவதுதான் வியாபாரியின் யுக்தி.

இஸ்லாம் ஏற்படுத்தியுள்ள இரு பெருநாட்களிலும் பெருநாள் அல்லாத நாட்களிலும் இஸ்லாம் காட்டித் தந்த அடிப்படையில் தான் நமது ஆடைகள் இருக்க வேண்டுமே தவிர நாம் நினைப்பதைப் போல் மார்க்கத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் விதமாக இருக்கக் கூடாது.

முழு கையையும் மணிக்கட்டு வரை மரைக்க வேண்டிய பெண்கள் முழுக் கையையும் திறந்து கொண்டு, இறுக்கமாக ஆடை அணிந்து மறைக்க வேண்டிய பகுதிகளையும் திறந்து கொண்டு திரியக் கூடிய காட்சியை அன்றாடம் காண முடிகின்றது.

திருமறைக் குர்ஆன் நமக்கு சொல்லும் அறிவுரையைப் பாருங்கள்.

விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருட் செல்வத்தையும், மக்கட் செல்வத்தையும் அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை.’ என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.

(அல்குர்ஆன் : 57 : 20)

மேற்கண்ட திருமறைக் குர்ஆன் வசனம் உலக வாழ்வின் யதார்த்தத்தை மிகத் தெளிவாக விளக்குகின்றது. உலகத்தை மழைக்கு ஒப்பாக்கிக் காட்டுவதின் மூலம் உலக வாழ்வு எப்படிப்பட்டது என்பதைப் பற்றி தெளிவாகின்றது.

இவ்வுலக வாழ்க்கை வீணும், விளையாட்டும் தவிர வேறில்லை. மறுமை வாழ்வு தான் வாழ்வாகும். அவர்கள் அறியக் கூடாதா?

(அல்குர்ஆன் : 29 : 64)

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

(அல்குர்ஆன் : 6 : 32)

பெருநாள் தினத்தை இஸ்லாம் எந்த முறையில் கொண்டாடும் படி பணித்துள்ளதோ அந்த முறையில் மார்க்கத்திற்கு உட்பட்டு கொண்டாடி மகிழ்வோமாக!

THANKS TO TNTJ