புது டெல்லி : டெல்லியில் 6 வயது குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரனை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த 30 வயதுள்ள நந்தன் என்கிற காமக்கொடூரன், 6 வயது குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அவனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை கூடுதல் அமர்வு நீதிபதி காமினி லாவ் முன் வந்தது. தீர்ப்பில் அவர் கூறியதாவது:
குழந்தைகளுக்கு எதிரான இதுபோன்ற காமக்கொடூரன்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வதே சரியான தண்டனை. ஆனால், இந்தியாவில் அதற்கு சட்டத்தில் இடமில்லை. இதுபோன்ற மிருகங்கள், சமூகத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தை இதுவரை அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அரசு சார்பில் அந்த குழந்தைக்கு உடனடியாக ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும். இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுபவர்கள், வாழ்நாள் முழுவதையும் சிறையில் தான் கழிக்க வேண்டும் என்பதை இந்த தீர்ப்பு ஒரு முன் உதாரணமாக அமையும் என்று நம்புகிறேன்.இவ்வாறு நீதிபதி ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நாளுக்கு நாள் இந்தியா வில் அதிகரித் துக் கொண்டே போகிறது. இந்நிலையில், குழந்தை களை பாலியல் கொடுமை செய்யும் காமக்கொடூரன்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வகை செய்யும் சட்டம் இயற்ற வேண்டும் என்ற நீதிபதியின் கருத்து, சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பொதுவாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களால்தான் பாலியல் தொந்தரவுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். இந்தியாவில் 53 சதவீத குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பதும், குறிப்பாக 5 முதல் 12 வயதுள்ள சிறுவர் சிறுமிகளே இதுபோன்ற கொடுமைக்கு பெரிதும் ஆளாக்கப்படுகின்றனர் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால் வெளிச்சத்துக்கு வராத இதுபோன்ற சம்பவங்களின் எண்ணிக்கை எத்தனையோ?
எப்போ வரும் இதுபோன்ற சட்டம்
குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கும் கொடூரன்களுக்கு தண்டனையாக ஆண்மை நீக்கம் செய்ய சட்டபூர்வமாக அனுமதிக்கும் நாடுகள்:
ணி அமெரிக்காவில் கலிபோர்னியா, புளோரிடா, ஜியார்ஜியா, லூசியானா, மோன்டேனா, ஓரிகான், டெக்சாஸ் மற்றும் விஸ்கான்சின் போன்ற 8 மாகாணங்களில் இதுபோன்ற தண்டனைக்கு சட்டத்தில் இடம் உள்ளது.
ணி தெற்கு கொரியாவில், கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் புதிய சட்டம் ஒன்றை இயற்றியது. அதில், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளை பாலியல் கொடுமை செய்பவர்களுக்கு இதுபோன்ற தண்டனை வழங்க அனுதிக்கப்பட்டு உள்ளது.
ணி போலந்து நாட்டில், குழந்தைகள், குடும்பத்தினரிடம் தகாத முறையில் நடந்து பாலியல் கொடுமை செய்பவர்களு க்கு கடந்த 2010ம் ஆண்டு ஆண்மை நீக்கம் செய்ய சட்டம் இயற்றப்பட்டு உள்ளது.
ணி செக் குடியரசு நாடுகளில் இதுபோன்ற குற்றம் செய்பர்வளுக்கு, இந்த கடுமையான தண்டனை விதிக்க சட்டம் இயற்றப்பட்டு, கடந்த 2009ம் ஆண்டு வரை 394 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.
எப்போது வரும் இந்தியாவில் இதுபோன்ற சட்டம்? அப்போது தான் தீரும் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளின் கஷ்டம்.
டெல்லியைச் சேர்ந்த 30 வயதுள்ள நந்தன் என்கிற காமக்கொடூரன், 6 வயது குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அவனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை கூடுதல் அமர்வு நீதிபதி காமினி லாவ் முன் வந்தது. தீர்ப்பில் அவர் கூறியதாவது:
குழந்தைகளுக்கு எதிரான இதுபோன்ற காமக்கொடூரன்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வதே சரியான தண்டனை. ஆனால், இந்தியாவில் அதற்கு சட்டத்தில் இடமில்லை. இதுபோன்ற மிருகங்கள், சமூகத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தை இதுவரை அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அரசு சார்பில் அந்த குழந்தைக்கு உடனடியாக ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும். இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுபவர்கள், வாழ்நாள் முழுவதையும் சிறையில் தான் கழிக்க வேண்டும் என்பதை இந்த தீர்ப்பு ஒரு முன் உதாரணமாக அமையும் என்று நம்புகிறேன்.இவ்வாறு நீதிபதி ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நாளுக்கு நாள் இந்தியா வில் அதிகரித் துக் கொண்டே போகிறது. இந்நிலையில், குழந்தை களை பாலியல் கொடுமை செய்யும் காமக்கொடூரன்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வகை செய்யும் சட்டம் இயற்ற வேண்டும் என்ற நீதிபதியின் கருத்து, சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பொதுவாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களால்தான் பாலியல் தொந்தரவுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். இந்தியாவில் 53 சதவீத குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பதும், குறிப்பாக 5 முதல் 12 வயதுள்ள சிறுவர் சிறுமிகளே இதுபோன்ற கொடுமைக்கு பெரிதும் ஆளாக்கப்படுகின்றனர் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால் வெளிச்சத்துக்கு வராத இதுபோன்ற சம்பவங்களின் எண்ணிக்கை எத்தனையோ?
எப்போ வரும் இதுபோன்ற சட்டம்
குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கும் கொடூரன்களுக்கு தண்டனையாக ஆண்மை நீக்கம் செய்ய சட்டபூர்வமாக அனுமதிக்கும் நாடுகள்:
ணி அமெரிக்காவில் கலிபோர்னியா, புளோரிடா, ஜியார்ஜியா, லூசியானா, மோன்டேனா, ஓரிகான், டெக்சாஸ் மற்றும் விஸ்கான்சின் போன்ற 8 மாகாணங்களில் இதுபோன்ற தண்டனைக்கு சட்டத்தில் இடம் உள்ளது.
ணி தெற்கு கொரியாவில், கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் புதிய சட்டம் ஒன்றை இயற்றியது. அதில், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளை பாலியல் கொடுமை செய்பவர்களுக்கு இதுபோன்ற தண்டனை வழங்க அனுதிக்கப்பட்டு உள்ளது.
ணி போலந்து நாட்டில், குழந்தைகள், குடும்பத்தினரிடம் தகாத முறையில் நடந்து பாலியல் கொடுமை செய்பவர்களு க்கு கடந்த 2010ம் ஆண்டு ஆண்மை நீக்கம் செய்ய சட்டம் இயற்றப்பட்டு உள்ளது.
ணி செக் குடியரசு நாடுகளில் இதுபோன்ற குற்றம் செய்பர்வளுக்கு, இந்த கடுமையான தண்டனை விதிக்க சட்டம் இயற்றப்பட்டு, கடந்த 2009ம் ஆண்டு வரை 394 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.
எப்போது வரும் இந்தியாவில் இதுபோன்ற சட்டம்? அப்போது தான் தீரும் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளின் கஷ்டம்.
No comments:
Post a Comment