திருவனந்தபுரம்: கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் வெடிகுண்டுகள் உள்பட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 21 பேர்கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மையில் அருகே நாராத்து பகுதியில் உள்ல கட்டிடத்தில் சிலர் ரகசியமாக ஆயுத பயிற்சி செய்வதாக மையில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலையில் இருந்து அந்த பகுதியை ரகசியமாக கண்காணித்தனர். அங்குள்ள தென்னந்தோப்பில் சணல் என்ற பெயரில் அறக்கட்டளை அலுவலகம் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. அந்த கட்டிடத்தில் சிலர் ரகசியமாக ஆயுத பயிற்சி செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அங்கு அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.
அங்கு ஏராளமான சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், அரிவாள்கள், வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள், தேச விரோதத்து தூண்டும் வகையிலான துண்டு பிரசுரங்கள், ஈரான் நாட்டை சேர்ந்த அடையாள அட்டைகள், மற்றும் பயங்கர ஆயுதங்கள் பறி்முதல் செய்யப்பட்டன. போலீசார் உள்ளே நுழைந்த போது அங்கு சிலர் ஆயுத பயிற்சி நடத்தி கொண்டிருந்தனர். தப்பி ஓட முயன்ற அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
நாரத்து பகுதியை சேர்ந்த அப்துல் சமது, அசீஸ், ஹஜ்மல் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இவர்களுக்கு பல தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 21 பேரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
NEWS FROM : THAT'S TAMIL NEWS
Published:
Thursday, April 25, 2013, 10:36 [IST]
No comments:
Post a Comment